விமான பணிப்பெண்களை தவறான முறையில் சீண்டிய பயணிக்கு நேர்ந்த கதி!
அமெரிக்காவில் விமான பணிப்பெண்களிடம் தவறாக நடந்துகொண்ட ஒரு இளைஞரை சக பயணிகள் இறுக்கியுடன் கட்டிப்போட்டு வைத்திருந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் கடந்த செவ்வாய்கிழமையன்று மாலை, பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிலடெல்பியா நகரத்தத்திலிருந்து மியாமிக்கு சென்ற ஃபிரான்டியர் ஏர்லைன்ஸ் விமானத்தில் குறித்த சம்பவம் நடந்துள்ளது.
அந்த விமானத்தில் பயணித்த மேக்ஸ்வெல் பெரி (Maxwell Berry) எனும் 22 வயது இளைஞர், குடிபோதையில் இருந்தது மாட்டுமல்லாமல், விமானத்தில் இரண்டு பணிப்பெண்களை தகாத முறையில் தொட்டு அநாகரிகமான செயல்களை செய்துள்ளார்.
மேலும், பலரையும் தகாத வார்த்தைகளில் பேசியதுடன், அதைக் கேட்க வந்த ஒரு ஆண் பணியாளரை முகத்தில் குத்தியுள்ளார்.
இந்த நிலையில், பாதுகாப்பது காரணங்களுக்காக, அந்த ஆண் பணியாளர் சக பயணிகளின் உதவியுடன் அவரை பிடித்து, இருக்கையில் அமர்ந்தபடி டேப்பைக் கொண்டு கட்டினர். இருப்பினும், பெரி தொடர்ந்து கத்திக்கொண்டே வந்துள்ளார்.
Frontier passenger allegedly touched 2 flight attendants breasts, then screamed his parents are worth $2 million, before punching a flight attendant. Frontier suspended the crew for duct taping the passenger to his seat as they landed in Miami. 22 yr old Max Berry is in custody. pic.twitter.com/4xS9Rwvafx
— Sam Sweeney (@SweeneyABC) August 3, 2021
விமானம் மியாமி விமான நிலையம் வந்தடைந்த பிறகு அவர் மியாமி-டேட் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். பெரி மீது பல பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
அவர் விமானத்தில் கட்டப்பட்டிருந்த நிலையில், கத்திக்கொண்டே வந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
#frontier #frontierairlines crazy it happened right beside, me it’s crazy out here pic.twitter.com/YdjURlSb5p
— k9spams (@k9spams) August 3, 2021