Baby Diapperல் 17 தோட்டாக்கள்., நியூயார்க் விமான நிலையத்தில் பயணி மீது நடவடிக்கை
நியூயார்க் லாகார்டியா விமான நிலையத்தில், 17 தோட்டாக்களை Baby Diapperல் மறைத்து கொண்டுவந்த பயணி கைது செய்யப்பட்டார்.
டிசம்பர் 20ஆம் திகதி, நியூயார்க்கின் லாகார்டியா விமான நிலையத்தில் பேபி டயப்பரில் 17 தோட்டாக்கள் கடத்தப்பட்டதை பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைச் சாவடியில் உள்ள XRay இயந்திரத்தில் அலாரம் அடித்ததால் அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டனர். பயணியின் கேரி பேக்கில் இருந்து டயப்பர் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. பின்னர், சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டார்.
TSA NewYork
அவரிடம் விசாரணை நடத்தியபோது, இந்த டயப்பர் எப்படி தனது பையில் வந்தது என்று தெரியவில்லை என்று முதலில் மறுத்துள்ளார். ஆனால் அவரிடம் பொலிஸார் தங்களுடைய பாணியில் விசாரித்ததில், அவருடைய காதலி தான் அப்படி வைக்கச் சொன்னது தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட நபர், சிகாகோ மிட்வே விமான நிலையத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்த ஆர்கன்சாஸைச் சேர்ந்த பயணி என்று அதிகாரிகள் அடையாளம் கண்டனர்.
ஆனால் அவரது பெயர் வெளியிடப்படவில்லை. ஆனால், சட்ட விரோதமாக டயப்பர்களில் தோட்டாக்கள் நடமாடுவதால் இந்த விடயம் வைரலாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Passenger hides 17 bullets in baby diaper, New York airport, baby diapers