நடுவானில் பறந்த விமானம்.. மாஸ்க் அணிய மறுத்த பயணி: இறுதியில் விமானி எடுத்த அதிரடி முடிவு!
அமெரிக்காவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பயணி ஒருவர் மாஸ்க் அணிய மறுத்ததால் விமானம் தரையிறக்கபட்டுள்ளது.
அமெரிக்காவின் Florida மாகாணத்தில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டன் நோக்கி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் சுமார் 129 பயணிகள் மற்றும் 14 பணியாளர்கள் இருந்தனர்.
அப்போது விமானத்தில் இருந்த பயணி ஒருவர் மாஸ்க் அணிய மறுத்துள்ளார். விமான பணிப்பெண்கள் அவரை மாஸ்க் அணியும்படி கூறினார்கள். ஆனால் அந்த நபர் மாஸ்க் அணிய தொடர்ந்து மறுத்து வந்துள்ளார்.
இது தொடர்பாக ஊழியர்களுக்கும், அந்த நபருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சக பயணிகள் எடுத்துக் கூறியும் அவர் மாஸ்க் அணிய மாட்டேன் என்பதில் பிடிவாதமாக இருந்தார்.
இதனால் வேறு வழியின்றி விமானம் புறப்பட்ட இடத்துக்கே மீண்டும் வர வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. இதையடுத்து மியாமி விமான நிலையத்துக்கே விமானம் திரும்பி வந்து தரையிறங்கியது.
இதையடுத்து தகவலின்பேரில் அங்கு ஏற்கனவே காத்திருந்த பொலிஸ் மாஸ்க் அணிய மறுத்த நபரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.