விமான கழிவறையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பயணி: லண்டனில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
விமானப் பயணி ஒருவர், விமானத்தின் கழிவறையில் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விமான கழிவறையில் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற பயணி
தாய்லாந்திலிருந்து லண்டன் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்றின் கழிவறையில், விமானப்பயணி ஒருவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொள்ள முயன்றுள்ளார்.
Image: Wikipedia
விமானம் தரையிறங்கும் நேரத்தில் அந்தப் பயணி விமானத்தின் கழிவறையில் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விமானப் பணிப்பெண்களும், விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த மருத்துவர் ஒருவரும் உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சையளித்துள்ளார்கள். விமானம் லண்டனில் தரையிறங்கியதும் உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம், இம்மாதம், அதாவது, மார்ச் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றுள்ளது. பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.