வந்தே பாரத் ரயிலின் உள்ளே கொட்டிய தண்ணீரால் பயணிகள் அவதி.., வைரலாகும் வீடியோ
வந்தே பாரத் ரயிலின் மேற்கூரையில் இருந்து நீர் கொட்டியதால் பயணிகள் அவதிக்குள்ளாகும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ
பயணிகளின் சொகுசு வசதிக்கு ஏற்ற வகையில் வந்தே பாரத் ரயில்களை இந்திய ரயில்வே இயக்கி வருகிறது. அந்தவகையில், உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் இருந்து டெல்லியை நோக்கி வந்தே பாரத் ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயிலில் திடீரென ஏசி காற்று நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், ஏசி காற்று வெளியே செல்லும் மேற்கூரைப் பகுதியில் இருந்து தண்ணீர் அருவி போல கொட்டியுள்ளது.
இதனால் ரயிலில் இருந்த பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். ரயிலில் தண்ணீர் கொட்டும் இந்த வீடியோவை தர்ஷில் மிஷ்ரா என்பவர் பகிர்ந்துள்ளார். மேலும், அவர் பல முறை புகார் அளித்தும் ரயில்வே ஊழியர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
That Singapore Airport type development model Modi ji trying to provide in Vande Bharat train #VandeBharat
— Mani (@1mani1pbi) June 24, 2025
&
Trait0rs say there is no development
in Modi era #Shameless 😡#ceasefire #ModiDisasterForIndia #ModiHaiTohMumkinHai #INDvsENG pic.twitter.com/ySaCu78KwF
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |