கார் மோதி ரத்த வெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. அவ்வழியாக வந்த நபர் செய்த செயல்! சிசிடிவி காட்சிகளை பார்த்து அதிர்ந்துபோன பொலிஸ்
சென்னையில் கார் மோதி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த இளைஞரிடமிருந்து நபர் ஒருவர் பையை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதன்கிழமை நள்ளிரவு 2.23 மணிக்கு தாம்பரம் ஜிஎஸ்டி சாலையிலே இந்த கொடூரம் சம்பவம் நடந்துள்ளது.
சம்பவத்தின் போது சரியாக 2.23 மணிக்கு அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த அர்ஜூன் என்ற நபர் பையை மாட்டிக்கெண்டு ஜிஎஸ்டி சாலையில் நடந்து செல்லும் போது, அதிக வேகத்தில் வந்த கார் அவரை பின்னால் மோதி தூக்கி வீசுகிறது.
இதில், அர்ஜூன் சம்பவயிடத்திலே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் அர்ஜூன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக குராம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து, காரை ஓட்டி வந்த பெருங்களத்தூரைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து பதிவான சிசிடிவி வீடியோக்களை ஆய்வு செய்த போது, விபத்தில் பலியான அர்ஜூனின் பையை நபர் ஒருவர் எடுத்துச்செல்வதை கண்டு பொலிசார் அதிர்ச்சியைடந்துள்ளனர்.
சரியாக 2.23 மணிக்கு விபத்து நடக்க, அவ்வழியாக வந்த நபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அர்ஜூனிடமிருந்து பையை திருடிச் சென்றுள்ளார்.
சரியாக 2.47 மணிக்கு மர்ம நபர் அர்ஜூனின் பையுடன் செல்வது அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவில் கமெராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி உதவியுடன் விரைவில் அர்ஜூனின் பையை திருடிச்சென்ற நபரை பிடித்துவிடுவோம் என பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.