ஜேர்மனியில் கொரோனா எப்போது உச்சமடையும்? சுகாதார அமைச்சர் முக்கிய தகவல்
ஜேர்மனியில் கொரோனா எப்போது உச்சமடையும் என்பது குறித்து நாட்டின் சுகாதார அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் புதன்கிழமை 1,12,323 பேருக்கு புதிததாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது.
ஜேர்மனியல் இதுவரை பதிவான தினசரி கொரோனா பாதிப்பில் இதுவே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஜேர்மனியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 81,86,850 ஆக அதிகரித்துள்ளது.
புதன்கிழமை 239 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர், இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,081 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா நிலை குறித்து சுகாதார அமைச்சர் Karl Lauterbach கூறியதாவது, ஜேர்மனியில் கொரோனா இன்னும் உச்சமடையவில்லை, நாட்டில் மற்றொரு கொரோனா அலையை தவிர்க்க மே மாதத்திற்குள் கட்டாய தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
இன்னும் சில வாரங்களில் கொரோனா தொற்று உச்சமடையும் என எதிர்பார்க்கிறேன்.
பிப்ரவரி மாத நடுப்பகுதியில் கொரோனா அலை உச்சமடையும் என்று நான் நினைக்கிறேன், பின்னர் வழக்குகளின் எண்ணிக்கை மீண்டும் குறையக்கூடும் என Karl Lauterbach தெரிவித்துள்ளார்.