ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதால் ஏற்படும் அற்புதங்கள்!
வேர்க்கடலை பல்வேறு சத்துக்களை கொண்டதாகும். ’ஏழைகளின் பாதாம்' என்று இதை பலரும் குறிப்பிடுகின்றனர்.
பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது என ஆய்வுகள் உணர்த்துகின்றன.
மலிவான விலையில் கிடைக்கும் வேர்க்கடலை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்
கொழுப்பு
வேர்க்கடலை சாப்பிட்டால் கொழுப்புச் சத்து அதிகமாகும் என்று பலரும் நினைத்திருக்கிறோம். மாறாக மனிதனுக்கு நன்மை செய்யும் கொழுப்பு தான் இதில் அதிகம் உள்ளது. வேர்க்கடலையில் உள்ள தாமிரச் சத்து நமது உடலில் எல்.டி.எல் எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைத்து நன்மை செய்யும் எச்.டி.எல் கொழுப்பை அதிகப்படுத்துகிறது.
மன அழுத்தம்
வேர்க்கடலையில் டிரைப்டோபீன் (Tryptophen) என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இது மூளை நரம்புகளைத் தூண்டும் செரட்டோனின் என்ற உயிர்வேதிப்பொருள் சுரக்க உதவுகிறது. இதனால் மனஅழுத்தம் குறையும்.
இதயம் பலமாகும்
வேர்க்கடலையை தொடர்ச்சியாகச் சாப்பிட்டு வந்தால், இதய நோய் பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது. இதில் உள்ள நல்ல கொழுப்பு சத்தான மோனோஅன்சேச்சுரேட் (Monounsaturated fats), ஒலீக் அமிலம் (Oleic Acid) போன்ற ஆன்டி ஆக்ஸிடென்ட் ஆகியவை இதய வால்வுகளை பாதுகாக்கிறது.
பித்தப்பை கல்
தினமும் சிறிதளவு வேர்க்கடலையை சாப்பிட்டு வந்தால் பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும். 20 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வில், 25 சதவிகிதம் பித்தப்பை கல் உருவாகும் வாய்ப்பு குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது.
ஞாபக சக்தி அதிகமாக
இதில் உள்ள வைட்டமின் பி3 மூளையின் செயல்பாட்டைத் தூண்டுவதோடு, நினைவாற்றலையும் அதிகரிக்க உதவும்.