நாவூறும் சுவையில் பச்சை பட்டாணி புலாவ்.., எப்படி செய்வது?
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரும் இந்த பச்சை பட்டாணி புலாவை விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், நாவூறும் சுவையில் பச்சை பட்டாணி புலாவ் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- புதினா- 1 கைப்பிடி
- கொத்தமல்லி- 1 கைப்பிடி
- பச்சைமிளகாய்- 3
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- நெய்- 2 ஸ்பூன்
- பட்டை- 1 துண்டு
- கிராம்பு- 2
- ஏலக்காய்- 2
- சீரகம்- 1 ஸ்பூன்
- முந்திரி- 5
- வெங்காயம்- 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- பச்சைபட்டாணி- 1 கப்
- அரிசி- 1 கப்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் புதினா, கொத்தமல்லி மற்றும் பச்சைமிளகாய் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சீரகம், முந்திரி, ஏலக்காய் மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

அடுத்து வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் அரைத்த கலவை சேர்த்து வதக்கவும்.
இதற்கடுத்து இதில் பச்சைப்பட்டாணி, உப்பு மற்றும் ஊறவைத்த அரிசி சேர்த்து கிளறவும்.
இறுதியாக இதில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து 2 விசில் விட்டு எடுத்தால் சுவையான பச்சை பட்டாணி புலாவ் தயார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |