ரூ. 210 செலுத்தினால் போதும்.., மாதந்தோறும் ரூ.5000 ஓய்வூதியம் பெறலாம்
சேமிப்பதற்கு அதிக பணம் கையில் இல்லாவிட்டாலும், மாதந்தோறும் சிறிய தொகையை முதலீடு செய்து முதுமைக்காலத்தை பாதுகாக்கலாம்.
இதற்கு மத்திய அரசின் அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana) உதவுகிறது.
இந்த திட்டத்தின் மூலம், 60 வயதுக்குப் பிறகு மாதம் ரூ. 1000 முதல் ரூ. 5000 வரை ஓய்வூதியம் பெறலாம்.
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் தொடர்ந்து பணம் செலுத்த வேண்டும்.
உதாரணமாக, 18 வயதில் சேரும் ஒருவர் மாதம் ₹210 செலுத்தினால், 60 வயதிற்கு பிறகு ₹5,000 ஓய்வூதியம் கிடைக்கும்.
மேலும், 30 வயதில் சேருபவர் மாதம் ₹577 செலுத்தினாலும் அதே ₹5,000 பெற முடியும்.
இந்த திட்டத்தில் சேர இந்திய குடிமகன் ஆக இருக்க வேண்டும், வயது 18 முதல் 40 வரை இருக்க வேண்டும் மற்றும் வங்கி கணக்கு அவசியம் இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் சேர, அருகிலுள்ள வங்கி அல்லது அஞ்சல் நிலையத்தில் விண்ணப்பிக்கலாம்.
KYC சரிபார்ப்பு செய்யப்பட்ட பிறகு, உங்கள் கணக்கு திட்டத்துடன் இணைக்கப்படும்.
மேலும், குடும்பத்திற்கும் பாதுகாப்பு உள்ளது. சந்தாதாரர் மற்றும் அவரது துணைவர் இறந்தால், சேமிக்கப்பட்ட தொகை நியமனதாரருக்கு வழங்கப்படும்.
மொத்தத்தில், சிறிய முதலீட்டில் பெரிய ஓய்வூதிய பாதுகாப்பை வழங்கும் திட்டமாக இது கருதப்படுகிறது.v
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |