நடிகர் விவேக் மரணத்திற்கு பின் பயப்படும் மக்கள்! கொரோனா 2-வது தடுப்பூசி போடவில்லை என்றால் என்ன ஆகும்?
பிரபல திரைப்பட நடிகர் விவேக் மரணத்திற்கு கொரோனாவிற்கான இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொள்ள சிலர் பயப்படுவதால், அது எதுவும் பாதிப்பு தருமா என்பது குறித்த கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
இந்தியாவில் சமீபநாட்களாக கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது, நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விவேக் கொரோனாவிற்கான முதல் தடுப்பூசி போட்டுக் கொண்டார்.
ஆனால் மறுநாளே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இவரின் மரணத்திற்கு பின், முதல் தடுப்பூசி போட்டுக் கொண்ட சிலர், இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்ள பயப்படுகின்றனர்.
இதனால் அவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்த சந்தேகங்களுக்கு, தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை இயக்குநராக பணியாற்றியவர் மருத்துவர் குழந்தைசாமி, பிரபல தமிழ் ஊடகமான பிபிசிக்கு விடை கொடுத்துள்ளார்.
அவர், இரண்டாவது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை என்றால், எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாது என்று கூறியுள்ளார். மேலும், அவர் ஒரு நபருக்கு குறிப்பிட்ட மருந்து அலர்ஜி ஏற்படுத்தும் என்றால் அது முதல் முறை அந்த மருந்து செலுத்தப்பட்டவுடன் தெரியவரும்.
தடுப்பூசி முதல் டோஸ் செலுத்திக்கொண்ட பின்னர் அந்த நபருக்கு பக்கவிளைவுகள் ஏற்படவில்லை என்றால் இரண்டாம் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் எந்த பாதிப்பும் ஏற்படாது.
முதல் தடுப்பூசியில் அந்த நபருக்கு ஏற்பட்ட கொரோனாவுக்கு எதிரான குறிப்பான நோய் எதிர்ப்பாற்றல் மேலும் பெருகுவதற்குத்தான் இரண்டாவது தடுப்பூசி செலுத்துகிறார்கள்.
இதனால், இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொள்ளவில்லை என்றால் பாதிப்பு ஒன்றும் ஏற்படாது. அதற்காக, இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருக்கக் கூடாது, போட்டுக் கொண்டால்,
கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு மேலும் அதிக உதவி செய்யும் என்று கூறியுள்ளார்.