கொரோனாவால் பாதித்தவர்கள் தனிமைப்படுத்த தேவையில்லை! பிரித்தானியாவில் முடிவுக்கு வரும் முக்கிய சட்டம்
பிரித்தானியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய தேவையை அடுத்த வார இறுதியில் ரத்து செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போதைக்கு பிரித்தானியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் 5 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
இந்நிலையில் தனிமைப்படுத்தல் தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட தகவலின் படி, அடுத்த வார இறுதியில் கொரோனாவால் பாதித்தவர்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டிய தேவையை நீக்கும் முனைப்புடன் பிரதமர் போரிஸ் இருப்பதாக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பான அறிவிப்பை பிரதமர் நாளை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐரோப்பிய நாடுகளிலே கொரோனாவால் பாதித்தவர்களை கடைகள், போது போக்குவரத்து மற்றும் வேலைக்கு செல்ல அனுமதிக்கும் முதல் நாடாக பிரித்தானியா இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும், இந்த நடடிவ்கை ஆபத்தானது என பிரதமரின் சுகாதார ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் பிரித்தானியா பிரதமர் போரிஸ் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா உடனடியாக முடிவுக்கு வர போவதில்லை, நாம் இந்த வைரஸுடன் வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.
நமது சுதந்திரங்களுக்கு கட்டுப்பாடு விதிக்காமல் தொடர்ந்து நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.