பிரதமர் ரணில் இல்லத்தை நோக்கி படையெடுத்த மக்கள் ! மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்
இலங்கையில் கொழும்பு - பிளவர் வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது பிரதமரின் இல்லத்தை நோக்கி படையெடுத்து வருகின்றது.
அப்பகுதியில் பெருந்திரளான அதிரடிப்படையினர் களமிறக்கப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் பிரதமரின் இல்லத்திற்கு முன்பாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க பொலிஸார் சற்றுமுன் கண்ணீர் புகை பிரயோகமும் மேற்கொண்டனர்.
இன்றைய தினம் கொழும்பின் கள நிலைமையும் சூடுபிடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.