எளிமையாக வாழ்வைத் துவங்கிய இந்திய வம்சாவளியினர்: இன்று ஆயிரம் கோடிகளில் வருமானம்
பிரித்தானியாவுக்கு புலம்பெயர்ந்த ஒரு தம்பதியரின் மகனான ஒருவர், எளிமையான நிலையில் வாழ்வைத் துவங்கிய நிலையில், இன்று பல ஆயிரம் கோடிகளுக்கு சொந்தக்காரராகியுள்ளார்.
எளிமையான நிலையில் துவங்கிய வாழ்வு
1960களில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த ஒரு தம்பதியர், ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து கைவினைப்பொருட்களை இறக்குமதி செய்து விற்பனை செய்துவந்துள்ளனர்.
இன்று, B&M என்னும் பிரித்தானிய சில்லறை வர்த்தக நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியாக கோடிகளில் சம்பாதிக்கிறார் அந்த தம்பதியரின் மகனான சைமன் அரோரா.
Image: Dave Benett/Getty Images for The National Gallery
இன்று ஆயிரம் கோடிகளில் வருமானம்
சைமனுடைய ஆண்டு வருவாய் 5 மில்லியன் பவுண்டுகள். இலங்கை மதிப்பில் 19,81,97,06,15,000 ரூபாய்.
இவ்வளவு பணம் இருந்தும், வெற்றி குறித்து மனதுக்குள் மகிழ்வது அவசியம்தான், ஆனால், எக்காரணம் கொண்டும் பெருமையடித்துக்கொள்ளக்கூடாது என்கிறார் சைமன்.
ஒரு துறையில் சிறந்து விளங்குகிறோம் என்பதற்காக, பெருமைப் படக்கூடாது, ஏனென்றால் நமக்கு தெரியாத பல விடயங்கள் உள்ளன.
ஆகவே, தாழ்மையுடன் நடந்துகொள்வது அவசியம் என்கிறார் அவர்.
வெற்றிகரமாக நீடிக்கவேண்டுமென்றால், நம்மைவிட குறிப்பிட்ட விடயங்களில் சிறந்து விளங்கும் மக்கள் நம்மைச் சுற்றி இருக்கவேண்டும் என்று கூறும் சைமன், நம் வெற்றிக்கு அதிர்ஷ்டமும் ஒரு காரணம் என்பதையும் மறந்துவிடக்கூடாது என்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |