ஜேர்மனியில் தடுப்பூசி பெறுவதற்காக வரிசையில் நின்ற மக்கள்: பொலிசார் தலையிட்டதால் தெரியவந்த திடுக் உண்மை
ஜேர்மன் நகரமொன்றில், ஒரு தடுப்பூசி மையம் முன்பு சுமார் 200 பேர் தடுப்பூசி பெறுவதற்காக நின்ற நிலையில், பொலிசார் அந்த மையத்தை அதிரடியாக மூடினார்கள்.
விடயம் என்னவென்றால், Lübeck நகரத்தின் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த அந்த மையத்தில், மருத்துவர் ஒருவர், தானே தயாரித்த, அரசால் அங்கீகரிக்கப்படாத ஒரு தடுப்பூசியை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருந்திருக்கிறார்.
உடனடியாக பொலிசார் அந்த மையத்தை மூடியதுடன், அங்கிருந்த மருந்துகளையும், ஊசிகளையும் பறிமுதல் செய்தார்கள்.
விடயம் என்னவென்றால், அதற்குள் அந்த மருத்துவர் சுமார் 50 பேருக்கு தடுப்பூசி செலுத்திவிட்டிருந்தார்.
அந்த மருத்துவரது பெயர் Winfried Stöcker. அவர் மருத்துவர் மட்டுமின்றி ஒரு தொழிலதிபரும் கூட. Lübeck நகர விமான நிலையம் அவருக்கு சொந்தமானது.
இப்படி அங்கீகரிக்கப்படாத தடுப்பூசியை மக்களுக்குச் செலுத்துவது, ஜேர்மன் மருந்துகள் சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
Winfried Stöcker மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கைகள் துவக்கப்பட்டுள்ளன.