இடி மின்னலுக்கிடையே மரத்தடியில் அமர்ந்து மதுபானம் அருந்திய நபர்கள்: நடந்த பயங்கரம்
ஜேர்மன் நகரமொன்றில், மரத்தினடியில் அமர்ந்து மதுபானம் அருந்திக்கொண்டிருந்த சிலரை மின்னல் தாக்கிய நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இடி மின்னலுக்கிடையே மரத்தடியில் அமர்ந்து மதுபானம் அருந்திய நபர்கள்
ஜேர்மன் நகரமான Unterensingenஇல் மதுபான விடுதி ஒன்றின் வெளியே அமர்ந்து மக்கள் மதுபானம் அருந்திக்கொண்டிருந்திருக்கிறார்கள். அப்போது புயலுக்கான அறிகுறிகள் தெரியவே, சுமார் 15 பேர் கட்டிடங்களுக்குள் சென்றுவிட்டிருக்கிறார்கள்.
ஆனால், ஆறு பேர் மட்டும் மரம் ஒன்றின் கீழ் அமர்ந்து தொடர்ந்து அமர்ந்திருக்க, திடீரென அவர்களை மின்னல் தாக்கியுள்ளது.
அவர்களில் மூன்று பேருக்கு அவசர உதவிக்குழுவினர் உயிர் காக்கும் சிகிச்சையளிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 11 வயது சிறுவன் ஒருவனும், 43 வயது பெண் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
மேலும், ஒரு 4 வயது பையனுக்கும், பிறந்து 11 மாதங்கள் கூட ஆகாத ஒரு பெண் குழந்தைக்கும் அதிர்ச்சிக்காக சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
ஒருவர் பலி
இந்நிலையில், மின்னல் தாக்கிய 35 வயது ஆண் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துவிட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.
இடி மின்னலுடன் புயலடிக்கும்போது, ஒரு கட்டிடம் அல்லது வாகனத்துக்குள் அடைக்கலம் புகுவது பாதுகாப்பானது என்கிறார்கள் நிபுணர்கள்.
யாராவது திறந்தவெளியில் சிக்கிக்கொண்டால், சமதளமான தரையில், பாதங்களை ஒன்றாக சேர்த்து வைத்துக்கொண்டு, கைகளை முழங்கால் மீது வைத்தபடி குத்துக்காலிட்டு அமர்வது உங்களை இடி மின்னலிலிருந்து பாதுகாக்கக்கூடும் என்கிறார்கள் அவர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |