தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல்
Uk tells people to stock up on water and tinned food: தண்ணீர் மற்றும் டின் செய்யப்பட்ட உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்த உள்ளது.
அபாயகரமான எதிர்பாராத வானிலை மற்றும் எதிரி நாடுகளின் ஏவுகணைத் தாக்குதல்களை எதிர்கொள்ள எவ்வாறு தயாராவது என்பது குறித்து பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட வாய்ப்புள்ளது.

கடுமையான புயல்கள், காட்டுத்தீ மற்றும் பகை நாடுகளின் தாக்குதல்களை எதிர்கொள்ள சிறப்பாக எவ்வாறு தயாராவது என்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த அரசாங்கம் தயாராகி வருகிறது.
இவற்றில் உணவு மற்றும் போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொள்வதும் அடங்கும். 2030-ஆம் ஆண்டிற்குள்ளேயே நேட்டோ (NATO) மீது ரஷ்யா தாக்குதல் நடத்தக்கூடும் என்று முன்னாள் பிரதமர் சர் கெய்ர் ஸ்டார்மர் இந்த ஆண்டு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், அமைச்சரவை அலுவலகம் தெரிவிக்கையில், தேசியப் பாதுகாப்பைப் பாதுகாப்பதே எந்தவொரு அரசாங்கத்தின் முதன்மையான முன்னுரிமை.
குடும்பங்கள் தங்களை மேலும் மீள்திறன் கொண்டவையாக ஆக்கிக்கொள்ள எடுக்கக்கூடிய எளிய வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், பல்வேறு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள நமது நாட்டின் தயார்நிலையை வலுப்படுத்தும் வீட்டுப் பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கும் உறுதிபூண்டுள்ளோம் என குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்யாவால் அச்சுறுத்தல் இருப்பதை பிரித்தானிய உளவு அமைப்புகள் உறுதி செய்துவரும் நிலையில், இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. மேலும், நேட்டோவிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாமல், தங்கள் சார்பாகத் தாக்குதல்களை நடத்துவதற்காக ரஷ்யா குழுக்களையோ அல்லது கூலிப்படையினரையோ களமிறக்கக்கூடும் என்ற அச்சமும் நிலவுகிறது.

இங்கிலாந்தின் மின் நிலையம் ஒன்றைச் சிறிது நேரம் செயலிழக்கச் செய்த இணையத் தாக்குதலுக்கு ஈரானின் ஆதரவு பெற்ற ஹேக்கர்கள் (hackers) காரணமெனக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து, இணைய அச்சுறுத்தல்கள் குறித்தும் கவலை எழுந்துள்ளது.
இதனிடையே, நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகளின் உற்பத்தியை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் உக்ரைனுக்குத் தொழில்நுட்ப ரகசியஙக்ளை வழங்கியதற்காக, பிரித்தானியாவிற்கு எதிராக வெளிப்படையான அச்சுறுத்தல்களை விடுத்த ரஷ்யாவை பிரதமர் ஆன்டி பர்னாம் எச்சரித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |