பேரறிவாளனுக்கு பெண் பார்க்க தொடங்கி விட்டோம்! குடும்பம் அமைத்து தர... அற்புதம்மாள் நெகிழ்ச்சி
பேரறிவாளன் திருமணத்திற்கு பெண் பார்க்க தொடங்கிவிட்டதாக அவர் தாயார் அற்புதம்மாள் கூறியுள்ளார்.
ராஜிவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த பேரறிவாளனை, உச்சநீதிமன்றம் மே 18ம் திகதி விடுதலை செய்தது. இதையடுத்து அவர், தனது விடுதலைக்காக சட்டப் போராட்டம் நடத்திய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, வைகோ, சீமான் மற்றும் ஆதரவாக இருந்த அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகரும், எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலினையும், பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் ஆகியோர் நேற்று சந்தித்து நன்றி கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அற்புதம்மாள், 19 வயதில் சிறைக்குச் சென்ற என் மகன் 31 ஆண்டுகள் கழித்து சுதந்திர மனிதனாக வெளியே வந்திருக்கிறார்.
சாரை சாரையாக சரணடைந்த உக்ரைன் வீரர்கள்! மரியுபோலை தட்டி தூக்கிய ரஷ்யா... முக்கிய தகவல்
இனி, பேரறிவாளனுக்கு குடும்பம் அமைத்து தர வேண்டும் என்ற ஏக்கம் உள்ளது. அவருக்கு ஏற்ற பெண் கிடைத்தால் உடனடியாக திருமணம் செய்ய தயாராக இருக்கிறோம். அதற்காக பெண் தேட தொடங்கி விட்டோம் என்று கூறினார்.
பேரறிவாளன் கூறுகையில்,'இது எனக்கு புது உலகமாக இருக்கிறது. சிறையில் எனக்கு எந்தவிதமான தொந்தரவுகளும் இல்லை. அதிகாரிகள் உறுதுணையாக இருந்தனர்.
சிறையில், நான் மற்ற சிறைவாசிகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தேன். சாமானியன் ஒரு வழக்கில் சிக்கிக் கொண்டால் எத்தனை துன்பங்களையும், வலிகளையும் சந்திக்க வேண்டும் என்பதை இந்த தண்டனை மூலம் உணர்ந்து கொண்டேன் என கூறியுள்ளார்.