முறைப்படி பேரறிவாளன் விடுதலை எப்போது? தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் முக்கிய தகவல்
பேரறிவாளனை முறைப்படி விடுதலை செய்து குறித்து தமிழக அரசு இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளது.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்தார் பேரறிவாளன். இந்நிலையில் தன்னை விடுவிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளனர்.
இந்நிலையில் முறைப்படி பேரறிவாளன் எப்போது விடுதலை செய்யப்படுவார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து தமிழகத்தின் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
அவர் கூறிகையில், பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து மாலை 4 மணிக்கு தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்தவுள்ளது என தெரிவித்துள்ளார்.