UPSC தேர்வு வினாத்தாளில் பெரியாருக்கு சாதிச்சாயம்.., விருது வழங்கும் விழாவில் விஜய் பேச்சு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியருக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் விருது மற்றும் பரிசுப்பொருட்களை வழங்கி வருகிறார்.
அவர் பேசியது
விஜய் வழங்கும் 2025-ம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா 3 கட்டங்களாக நடைபெற இருக்கும் நிலையில், மாமல்லபுரத்தில் முதற்கட்ட பரிசளிப்பு விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் பங்கேற்ற தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் உரையாற்றினார்.
அப்போது அவர் பேசுகையில், "சாதி, மத பிரிவினை சிந்தனையால் உங்களை பிரிவுபடுத்த விடாதீர்கள். போதை பொருட்களை போன்ற சாதி மற்றும் மதத்தை தூக்கி எறிய வேண்டும்.
UPSC தேர்வு வினாத்தாளில் பெரியாருக்கு சாதிச்சாயம் பூசப்பட்டுள்ளது. இயற்கையின் அம்சங்களான வெயிலும் மழையும் சாதி, மதம் பார்த்தா வருகிறது.
மாணவர்கள் நேர்மறை சிந்தனையுடன் பயணிக்க வேண்டும். அதேபோல அனைத்தையும் அறிவியல் பூர்வமாக அணுக வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |