பணம் கீழே விழுந்துவிட்டதாக கூறிய நபர்: காரிலிருந்து இறங்கிய பெண்ணுக்கு நேர்ந்த துயரம்
லண்டனில், விநோத மோசடி ஒன்றில் சிக்கி விலைமதிப்பில்லாத நகைகளை பறிகொடுத்துள்ளார் பெண்ணொருவர்.
பணம் கீழே விழுந்துவிட்டதாக கூறிய நபர்
மேற்கு லண்டனிலுள்ள Southall என்னுமிடத்தில் அமைந்துள்ள வங்கி ஒன்றிற்குச் சென்ற பரம்ஜீத் கௌர் (Paramjit Kaur, 45) என்னும் பெண், லாக்கரிலிருந்த தனது நகைகளை எடுத்துக்கொண்டு பார்க் செய்திருந்த தனது காரில் ஏறியுள்ளார்.
(Image: Supplied)
அப்போது, கார் கண்ணாடியைத் தட்டிய ஒருவர், உங்கள் பணம் கீழே விழுந்துவிட்டது என்று கூற, காரிலிருந்து கீழே இறங்கியுள்ளார் பரம்ஜீத்.அது தன் பணம் இல்லை என்று கூறுவதற்குள் மறுபக்கம் கார் கதவைத் திறந்த ஒருவர், பரம்ஜீத் அப்போதுதான் வங்கியிலிருந்து எடுத்துவந்த நகைகளை வைத்திருந்த கைப்பையை எடுத்துக்கொண்டு ஓடியுள்ளார்.
உண்மையில், கார் கண்ணாடியைத் தட்டியவரும், கைப்பையைத் தூக்கிக்கொண்டு ஓடியவரும் கூட்டாளிகள். வங்கியிலிருந்து, இதற்கிடையில், நடப்பதைக் கண்ட வங்கி ஊழியர் ஒருவர் பரம்ஜீத்துக்கு உதவ ஓடிவந்துள்ளார். அதற்குள் திருடர்கள் இருவரும் ஒரு வேனில் ஏறித் தப்பிவிட்டார்கள்.
(Image: Supplied)
விலைமதிப்பில்லாத நகைகள்
பரம்ஜீத் பறிகொடுத்த நகைகளின் மதிப்பு 25,000 பவுண்டுகள். இலங்கை மதிப்பில் 94,05,863.92 ரூபாய். விடயம் பணம் மட்டுமல்ல, அந்த நகைகள் பரம்ஜீத்தின் குடும்ப நகைகள். பெற்றோர் கொடுத்த நகைகளும், முக்கியமான புகைப்படங்கள் சிலவும் திருட்டுப்போன அவரது கைப்பையில் இருந்துள்ளன.
அதிர்ச்சியில் பரம்ஜீத்துக்கு இரத்த அழுத்தம் அதிகரிக்க, சிறிது நேரத்தில் பொலிசார் வந்து விசாரிக்கும்போது மயங்கி விழுந்துள்ளார் அவர். அழுதுகொண்டே இருந்த அவரது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர மருத்துவர் அவருக்கு மாத்திரைகள் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
(Image: Google)
நடந்த சம்பவத்துக்கு தாங்கள் பொறுப்பேற்க முடியாது என வங்கி கைகழுவிவிட, பொலிசார் தனது கார் கதவிலிருந்த திருடனின் கைரேகையை கூட எடுக்கவில்லை என்று பொலிசார் மீதும் குற்றம் கூறியுள்ளார் பரம்ஜீத்.
அந்த சம்பவத்துக்குப்பின் வீட்டை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார் பரம்ஜீத், யாரையும் நம்பமுடியவில்லை, யாரைப் பார்த்தாலும் சந்தேகத்துடனேயே பார்க்கும் நிலையில் இருக்கிறேன் என்கிறார் அவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |