பயங்கர வன்முறைச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்த நபர்கள்... சுவிஸ் மற்றும் ஜேர்மன் பொலிசார் அதிரடி
சுவிட்சர்லாந்து மற்றும் ஜேர்மனியில் பொலிசார் இணைந்து நடத்திய ஆபரேஷன் ஒன்றில், ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
சூரிச், Sankt Gallen மற்றும் Lucerne ஆகிய மாகாணங்களில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் இருவர் சுவிஸ் குடிமக்கள் என்றும் ஒருவர் Bosnia-Herzegovina நாட்டவர் என்றும் அட்டார்னி ஜெனரல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மற்றொருவர் மேற்கு ஜேர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ளவர்கள் பயங்கர வன்முறைச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுவதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.