மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி - உயர்தர பரீட்சை இடைநிறுத்தப்படுமா?

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination
By Kirthiga Nov 25, 2024 11:37 AM GMT
Kirthiga

Kirthiga

in கல்வி
Report

2024 உயர் தர பரீட்சையை நடத்துவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் (FR) மனுவை டிசம்பர் 12-ஆம் திகதி பரிசீலிக்க உச்ச நீதிமன்றம் நிர்ணயித்துள்ளது.

பரீட்சை பரீட்சார்த்தி ஒருவர் தாக்கல் செய்த மனு, பிரதம நீதியரசர் முர்து பெர்னாண்டோ, நீதியரசர்களான ஜயந்த ஜயசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று (25) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோரை பிரதிவாதிகளாகக் குறிப்பிட்டு கேகாலையில் வசிக்கும் பரீட்சையின் பரீட்சார்த்தி ஏ.எம்.ஹன்சனி கவீஷாவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நவம்பர் 29, 2023 அன்று கல்வி அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையின்படி, 2024 ஆம் கல்வியாண்டில் அரசு பள்ளிகள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகள் மற்றும் பிரிவேனாக்களில் 170 நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது என்று மனுதாரர் கூறுகிறார்.

எவ்வாறாயினும், 170 நாட்கள் கல்விக் காலம் முடிவதற்குள், உயர்தரப் பரீட்சையை நடத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள தீர்மானம் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு இழைக்கப்படுகின்ற பாரிய அநீதியாகும் என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

மாணவர்களுக்கு இழைக்கப்படும் பாரிய அநீதி - உயர்தர பரீட்சை இடைநிறுத்தப்படுமா? | Petition Seeking Suspend Holding Of 2024 A L Exam

இந்த வருடம் முதல் தடவையாக பரீட்சைக்கு தோற்றவுள்ள சுமார் 300,000 மாணவர்களுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாகவும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, 170 நாள் படிப்பு முடிவதற்குள், G.C.E உயர்தரத் தேர்வை நடத்தியதன் மூலம் தங்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும், நவம்பர் 25 முதல் டிசம்பர் 20 வரை தேர்வு நடத்தும் முடிவை செல்லாது என்றும் மனுதாரர் கோரியுள்ளார்.

மேலும், இந்த மனு விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வெளியாகும் வரை தேர்வை நடத்த இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், மனுதாரர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி திரந்த வலலியத்தே, மனுவில் திருத்தம் செய்து, உண்மைகளை உறுதிப்படுத்துவதற்கான திகதியை வழங்குமாறு கோரினார்.

இதன்படி, திருத்தப்பட்ட மனுவை தாக்கல் செய்ய அனுமதி வழங்கிய நீதிமன்றம், உண்மைகளை உறுதிப்படுத்தும் வகையில் சம்பந்தப்பட்ட மனுவை டிசம்பர் 12ஆம் திகதிக்கு அழைக்குமாறு உத்தரவிட்டது.

2024 உயர் தர பரீட்சை இன்று (25) காலை 8.30 மணிக்கு நாடு முழுவதும் 2,312 மையங்களில் ஆரம்பமானது.

இந்த ஆண்டு, மொத்தம் 333,185 பரீட்சார்த்திகள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
நன்றி நவிலல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, சுவிஸ், Switzerland

13 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முரசுமோட்டை, Pforzheim, Germany

13 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Mississauga, Canada

12 Apr, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, சாவகச்சேரி, London, United Kingdom, சுவிஸ், Switzerland

12 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Drancy, France

03 Apr, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Zürich, Switzerland

13 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, மட்டக்களப்பு, கொழும்பு, நெடுங்கேணி, Harrow, United Kingdom

13 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US