தமிழக ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? உண்மையில் நடந்தது என்ன
தமிழக ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
பெட்ரோல் குண்டு வீச்சு
தமிழக ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக ரவுடி கருக்கா வினோத் என்பவரை பொலிசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக, ஆளுநர் மாளிகை பல்வேறு கருத்துக்களை குற்றச்சாட்டுகளாக முன்வைத்து வருகிறது.
பொலிசார் விளக்கம்
இந்நிலையில், ஆளுநர் மாளிகை முன்பு நடந்த சம்பவத்தின் புகைப்படங்கள் மற்றும் சிசிடிவியில் பதிவான வீடியோவை வெளியிட்டு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்ட புகைப்படத்தில் ரவுடி கருக்கா வினோத், ஆளுநர் மாளிகையின் முன்பு இரண்டு பெட்ரோல் குண்டுகளுடன் நிற்பது தெரிகிறது. அப்போது, அங்கிருந்த பொலிஸ் ரவுடியை தள்ளிவிட்டு, பெட்ரோல் குண்டுகளை பறிமுதல் செய்வதும் தெரிகிறது.
#புரூடா_ஆளுநர்#VideoViral #leakedviralvideo #TNPolice #RNRavi #fakebjp #எங்கஏரியா_உள்ளவராதே pic.twitter.com/7UIKNzRQ0d
— எம் அப்துல் லத்தீப் (@DMKLATIF) October 27, 2023
ஆகையால், ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச முயற்சித்ததும் ஒருவர் மட்டுமே என பொலிசார் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |