10,000 டொலர்கள் வென்ற இந்திய வம்சாவளியினரை பின்தொடர்ந்த கொள்ளையன்... பணத்துக்காக பரிதாபமாக பலியான உயிர்
இந்திய வம்சாவளியினர் ஒருவர் கேசினோ ஒன்றில் 10,000 டொலர்கள் பரிசு வென்றதைக் கவனித்த ஒருவர், அவரைப் பின்தொடர்ந்து சென்று, அவரது வீட்டில் வைத்தே அவரை சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூஜெர்சியைச் சேர்ந்த பார்மா எக்சிகியூட்டிவான Sree Ranga Aravapalli (54) என்பவர், கடந்த செவ்வாயன்று பிலதெல்பியாவிலுள்ள கேசினோ ஒன்றிற்கு சென்றிருக்கிறார்.
அங்கு அவர் 10,000 டொலர்கள் பரிசு வென்றதைக் கவனித்த ஒருவர், அவரைத் தனது காரில் பின்தொடர்ந்திருக்கிறார். Aravapalli வீட்டுக்கு வந்ததும், அவருக்குத் தெரியாமல் அவரது வீட்டின் பின் பக்கக் கதவு ஒன்றை உழைத்துக்கொண்டு உள்ளே நுழைந்த அந்த நபர் Aravapalliயை சுட்டுக் கொன்றிருக்கிறார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் வாழ்பவர்களை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், கொலையாளியைத் தேடிய பொலிசார், Aravapalliயின் காரை மற்றொரு கார் தொடர்வதையும், பிறகு அந்த கார் மட்டும் பிலதெல்பியாவுக்கு திரும்புதையும் கவனித்துள்ளார்கள்.
இரண்டே நாட்களில், அவர்கள் Jekai Reid-John (27) என்ற நபரைக் கைது செய்துள்ளார்கள். Aravapalliயை முன் பின் அறியாத Jekai, அவர் கேசினோவில் பணம் வென்றதைக் கவனித்துவிட்டு, அவரது பணத்துக்காகவே 50 மைல் பயணித்து அவரைப் பின்தொடர்ந்து அவரைக் கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.