ஒரு சாலை விபத்து... பொலிசாருக்கு ஏற்பட்ட சந்தேகம்: பின்னணியில் இருந்த பயங்கர சம்பவம்

Uttar Pradesh
By Balamanuvelan May 03, 2025 11:30 AM GMT
Balamanuvelan

Balamanuvelan

in இந்தியா
Report

சாலை விபத்து என முடித்துவைக்கப்பட்ட விபத்தொன்றின் பின்னணியில் ஒரு பயங்கர சம்பவம் இருந்ததை பொலிசார் கண்டறிந்துள்ளனர்.

ஒரு சாலை விபத்து...

2024ஆம் ஆண்டு, ஆகத்து மாதம் 1ஆம் திகதி, இந்தியாவின் உத்தரப்பிரதேசத்திலுள்ள Sainik Chauraha என்னுமிடத்தில், கார் விபத்தொன்றில் பலியானார் தரியாப் யாதவ் என்னும் மாற்றுத்திறன் கொண்ட நபர். 

uttarpradesh road accident

தன் சகோதரர் கொல்லப்பட்டதாக தரியாபின் சகோதரர் ராஜேந்திரா பொலிசில் புகாரளிக்க, விசாரணை மேற்கொண்ட பொலிசார், அது விபத்துதான் என வழக்கை முடித்துவைத்துவிட்டனர்.

பொலிசாருக்கு ஏற்பட்ட சந்தேகம்

இந்நிலையில், ஒன்பது மாதங்களுக்குப் பிறகு தரியாபின் பெயரில் சுமார் 50 லட்ச ரூபாய் காப்பீடு கிளைம் செய்யப்பட்டுள்ளது.

அது குறித்து காப்பீட்டு நிறுவனம் பொலிசாருக்கு தகவலளிக்க, பொலிசார் தரியாப் வழக்கை மீண்டும் துவக்கியுள்ளனர். 

கோவா கோவில் திருவிழாவில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு

கோவா கோவில் திருவிழாவில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் 6 பேர் உயிரிழப்பு

அப்போது, வழக்கில் பல ஓட்டைகள் இருப்பது தெரியவந்துள்ளது. தரியாப் மாற்றுத் திறன் கொண்ட ஒருவர். அவர் தன் வீட்டை விட்டு எங்குமே செல்வதில்லை.

ஆனால், அவர் தன் வீட்டிலிருந்து 27 கிலோமீற்றர் தொலைவில் விபத்தில் கொல்லப்பட்டிருந்தார், அதுவும் இரவு 10.00 மணியளவில்.

தெரியவந்த பயங்கர உண்மை

இரண்டாவது விசாரணையில் பயங்கர உண்மை ஒன்று தெரியவந்தது. ஹரிஓம் மற்றும் வினோத் என்னும் இரு சகோதரர்களுக்கு அவசரமாக பணம் தேவைப்பட்டுள்ளது.

காப்பீட்டு முகவரான பங்கஜ் ராகவ் என்பவரிடம் அவர்கள் ஆலோசனை கேட்க, மிக மோசமான நோயால் பாதிக்கப்பட்டுள்ள அல்லது மாற்றுத் திறன் கொண்டவரான ஒருவர் பெயரில் காப்பீடு எடுக்கச் சொல்லியிருக்கிறார் அவர்.  

uttar pradesh police

அதன்படி, தரியாப் பெயரில் பல காப்பீடுகள் எடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு காப்பீடு முதிர்ச்சியடைந்ததும், அதில் கிடைத்த 50,000 ரூபாயை பிரதாப் என்னும் நபருக்குக் கொடுத்து தரியாபை கொலை செய்யச் சொல்லியிருக்கிறார்கள் ஹரிஓம் வினோத் சகோதரர்கள். 

அதன்படி, ஒரு நாள் இரவு தரியாபை வீட்டை விட்டு தூரமாக அழைத்துச் சென்ற வினோத் அவரது தலையில் சுத்தியலால் அடிக்க, பிரதாப் அவர் மீது காரை ஏற்றிக் கொன்றுள்ளார் என்னும் அதிரவைக்கும் உண்மை விசாரணையில் தெரியவந்தது.

ஹரிஓம், வினோத், பிரதாப் மற்றும் காப்பீட்டு முகவரான பங்கஜ் யாதவ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், இதற்குள் சம்பந்தபட்டவர்கள் சுமார் 16 லட்ச ரூபாயை கிளைம் செய்து வாங்கிவிட்டார்கள்!

  உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.   


5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US