பிரித்தானிய மாகாராணியாருக்கே உத்தரவு பிறப்பித்துள்ள மருத்துவர்கள்: ஒரு சுவாரஸ்ய தகவல்
பிரித்தானிய மகாராணியார் இனி மது அருந்தக்கூடாது என மருத்துவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்!
ஏற்கனவே, திடீரென மகாராணியார் வாக்கிங் ஸ்டிக்குடன் காட்சியளித்ததால் அவருக்கு என்ன ஆயிற்று என சந்தேகம் ஏற்பட்ட நிலையில், தற்போது மருத்துவர்கள் அவருக்கு மது அருந்த தடை விதித்துள்ள செய்தியும் வெளியாகியுள்ளது.
ஆனால், கவலைப்படும் அளவுக்கு ஒன்றும் இல்லையாம். எப்போதுமே மகாராணியாருடன் யாராவது ஒருவர் பயணிப்பதைப் பார்த்திருப்போம். ஒரு கட்டத்தில் கணவர் பிலிப், சில நேரங்களில் இளவரசி கேட், சில நேரங்களில் இளவரசர் ஹரியின் மனைவி மேகன், பிறகு இளவரசி சோபி என பலரும் ராணிக்கு கம்பெனி கொடுத்த நிலையில், திடீரென ஒரு நாள் மகாராணியார் வாக்கிங் ஸ்டிக்குடன் நடக்க, போங்கப்பா நீங்களும் உங்க, கம்பெனியும், இனி எனக்கு யாரும் வேண்டாம், நான் என் வாக்கிங் ஸ்டிக் உதவியுடனே நடக்கிறேன் என அவர் முடிவு செய்துவிட்டாரோ என்று எண்ண, ஆனால், அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, கொஞ்சம் வசதியாக இருக்கும் என்பதால்தான் அவர் வாக்கிங் ஸ்டிக்குடன் நடக்கத் துவங்கியிருக்கிறார் என்ற விளக்கம் கிடைத்தது.
அதற்கு அடுத்தபடியாக இனி மகாராணியார் மது அருந்தக்கூடாது என மருத்துவர்கள் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கும் தற்போது விளக்கம் வெளியாகியுள்ளது. அதாவது, மகாராணியாருக்கு உடல்நல பிரச்சினையெல்லாம் ஒன்றும் இல்லை. அடுத்த ஆண்டு (2022), ஜூன் மாதம், அவரது பிளாட்டினம் ஜூபிலி, அதாவது, இரண்டாம் எலிசபெத் மகாராணியார் பதவியேற்று 70 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழாவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
அப்போது, பல நாடுகளை சந்திக்க மகாராணியார் திட்டமிட்டுள்ளார். அதற்காக தொடர்ச்சியாக பல பணிகள் அவருக்கு உள்ளன. ஆகவே, அந்த நேரத்தில் அவர் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என்பதற்காகவே, அவர் மதுபானத்தை விடவேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
மகாராணியார் வழக்கமாகவே அதிக மது அருந்துவர் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது!