இளவரசி கேட்டின் உடலைக் குறித்து விமர்சித்த பிரபல ஊடகவியலாளருக்கு குவியும் கண்டனங்கள்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பிரித்தானிய இளவரசி கேட்டின் உடலைக் குறித்து விமர்சித்த பிரபல ஊடகவியலாளருக்கு இணையத்தில் கண்டனங்கள் குவிகின்றன.
இளவரசி கேட்டின் உடலைக் குறித்து விமர்சித்த பிரபலம்
பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன், அறுவை சிகிச்சை மற்றும் புற்றுநோய் சிகிச்சைக்குப்பின் முதன்முதலாக கடந்த சனிக்கிழமையன்று மன்னரின் அதிகாரப்பூர்வ பிறந்தநாள் விழாவில் தன் குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.
நீண்ட நாட்களுக்குப்பின் இளவரசி கேட் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதையடுத்து, அவரது ரசிகர்களும், பிரித்தானிய மக்களும் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்கள். ஊடகங்கள் இளவரசியின் புகைப்படங்களால் நிறைந்திருந்தன.
இந்நிலையில், மனதில் பட்டதை கொஞ்சமும் யோசிக்காமல் பேசி, அதனால் அவ்வப்போது பிரச்சினையில் சிக்குபவரான பிரபல ஊடகவியலாளரான பையர்ஸ் மார்கன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் இளவரசியின் உடலைக் குறித்து விமர்சித்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இளவரசி கேட் மிகவும் ஒல்லியாக காணப்பட்டதாக தெரிவித்த மார்கன் அத்துடன் நிறுத்தாமல், இளவரசி கேட்டும் மன்னர் சார்லசும், தாங்கள் என்ன வித புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தெரியப்படுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார்.
குவியும் கண்டனங்கள்
அறுவை சிகிச்சையும் முடித்து, புற்றுநோய் சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கும் ஒருவர் வேறு எப்படி இருப்பார். அதுவும் இளவரசி இவ்வளவு கஷ்டங்களுக்கிடையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டதே பெரிய விடயம். அப்படியிருக்கும் நிலையில் இளவரசி கேட் ஒல்லியாக இருப்பதாக தோன்றுவதாக மார்கன் கூற, இணையத்தில் அவரை வறுத்தெடுக்கிறார்கள் பிரித்தானியர்கள்.
இளவரசி எப்போதுமே ஒல்லியாகத்தான் இருப்பார். அதெல்லாம் அவர்களுடைய தனிப்பட்ட விடயம், மார்கன், ராஜ குடும்பத்தினரின் பிரைவசியை மதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்கள் மக்கள்.
இன்னொரு பக்கமோ, புற்றுநோய் சிகிச்சையின் மத்தியிலும் இளவரசி கேட் பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்டது, புற்றுநோய் பாதித்த பலருக்கும் உத்வேகத்தை அளித்துள்ளதாக புற்றுநோய் பாதித்தோர் ஆதரவு தொண்டு நிறுவனங்கள் இளவரசியை மனதார பாராட்டியுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |