லண்டனில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு சென்று செய்த உதவி! விமானியின் செயலால் நெகிழ்ந்து போன பிரதமர் போரிஸ்
கொரோனாவால் போராடி வரும் இந்தியாவுக்கு ஆக்ஸிஜனை கல்சா எய்ட் மூலம் நன்கொடையாக பெற்று கொண்டு வந்த நபருக்கு இங்கிலாந்து பிரதமருக்கான விருது வழங்கப்படவுள்ளது.
பிரித்தானியாவின் தலைநகர் லண்டனில் உள்ள விர்ஜின் அட்லாண்டிக் என்ற விமான நிறுவனத்தில் விமானியாக பணியாற்றி வருபவர் ஜஸ்பால் சிங். சீக்கிய மதத்தை சேர்ந்தவரான இவர், அங்கிருக்கும் கல்சா எய்ட் என்ற தொண்டு நிறுவனத்திலும் பொறுப்பில் உள்ளார்.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக, போதிய ஆக்ஸிஜன் இன்றி ஏராளமான மக்கள் உயிரிழந்து வருவதால், இதைக் கண்டு வேதனையடைந்த ஜஸ்பால் சிங் இந்தியாவுக்கு உதவி செய்ய முடிவு செய்தார்.
அதன் படி, கல்சா எய்ட் அறக்கட்டளை மூலம் நன்கொடையாக பெற்ற 200 ஆக்ஸிஜன் செறிவூட்டி களை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக, தான் பணியாற்றும் விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்திடம் பேசி நிலைமையை விளக்கினார்.
One of our incredible pilots, Jas Singh, has been awarded the Prime Minister's Points of Light award.
— virginatlantic (@VirginAtlantic) May 13, 2021
Jas has been recognised for his amazing efforts with charity @Khalsa_Aid, flying hundreds of oxygen cylinders to help the Covid crisis in India. We're hugely proud of him.
விமான நிறுவனம் இலவசமாக விமானத்தை இந்தியாவுக்கு அனுப்ப ஒப்புக் கொண்டது. தானே விமானத்தை ஓட்டிச் செல்வதாகக் கூறிய ஜஸ்பால் சிங், 200 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுடன் சமீபத்தில் லண்டனில் இருந்து விமானத்தில் இந்தியாவுக்கு கொண்டு வந்து ஒப்படைத்தார்.
இதை அறிந்த பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜோன்சன், ஜஸ்பால் சிங்கை பாராட்டிய நிலையில், மனிதாபிமான சேவைக்காக பிரதமரின் பாயின்ட்ஸ் ஆப் லைட் விருதும் அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜஸ்பால் சிங்குக்கு போரிஸ் ஜோன்சன் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் உங்களது தாராளமான உதவிக்கு நன்றி.
இந்திய மக்களுக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை விமானத்தில் எடுத்துச் சென்றதை கேட்டு எனக்கு உத்வேகம் ஏற்பட்டது.
இரு நாட்டுக்கும் உள்ள ஆழமான நட்பை காட்டும் வகையில் இந்திய மக்களுக்கு, பிரித்தானியா மக்கள் உதவ முன்வந்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.