கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்த படத்திற்கு தேசிய விருதா? கொந்தளித்த முதல்வர்
தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு தேசிய விருது அளித்ததற்கு, கேரள மாநில முதல்வர் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
தேசிய விருதுகள்
இந்தியாவின் உயரிய திரைப்பட விருதான தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
தமிழில் 'பார்க்கிங்', ஹிந்தியில் '12th ஃபெயில்', 'தி கேரளா ஸ்டோரி' ஆகிய படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை இயக்கிய சுதீப்தோ சென் சிறந்த இயக்குநருக்கான விருதை பெற உள்ளார்.
முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்
இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் 'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு விருது அறிவிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "கேரளாவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்துடன் தவறான தகவல்களைப் பரப்பி, வகுப்புவாத வெறுப்பை விதைக்கும் ஒரு திரைப்படத்தை கௌரவிப்பதன் மூலம், தேசிய விருதுகள் நடுவர் குழு, சங்பரிவாரின் பிளவுபடுத்தும் சித்தாந்தத்தில் வேரூன்றிய ஒரு கதைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக எப்போதும் நல்லிணக்கம் மற்றும் எதிர்ப்பின் கலங்கரை விளக்கமாக நிற்கும் நிலமான கேரளாவுக்கு, இந்த முடிவு மிகப்பெரிய அவமானத்தைத் தந்துள்ளது. மலையாளிகள் மட்டுமல்ல, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும், அரசியலமைப்பு மதிப்புகளைப் பாதுகாக்க தங்கள் குரலை எழுப்ப வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |