270 கோடி ரூபாய் ரொக்க பணம்... 250 கிலோ தங்கம்! ஐடி ரெய்டில் வசமாக சிக்கிய பிரபல தொழிலதிபர்
இந்தியாவில் பிரபல தொழில்பதிபர் பியூஷ் ஜெயின் வீட்டில் இருந்து 270 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கான்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பியூஷ் ஜெயின். இவர் வாசனை திரவிய பொருட்களை விற்பனை செய்து வருகிறார்.
இந்நிலையில், இவர் மீது வரி ஏய்ப்பு மற்றும் போலி ரசீது மூலம் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்த நிலையில், கடந்த வாரம் வருமானவரித்துறை மற்றும் ஜிஎஸ்டி தலைமை இயக்குனரக அதிகாரிகள், ஜிஎஸ்டி புலானாய்வு துறை ஆகியவை இணைந்து அவருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
அப்போது, அவரிடம் ரொக்கமாக மட்டும் 257 கோடி ரூபாய் இருப்பதைக் கண்டு அதிகாரிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அதைத் தொடர்ந்து, கனவ்ஜியில் உள்ள அவருக்கு சொந்தமான பரம்பரை பங்களாவில் பொலிசார் சோதனை மேற்கொண்ட போது, அங்கு 10-க்கும் மேற்பட்ட லாக்கர்கள் இருந்துள்ளன. அதுமட்டுமின்றி, சுமார் 500-க்கும் மேற்பட்ட சாவிகள் புழக்கத்தில் இருந்துள்ளன.
இது குறித்து அவர் வீட்டில் வேலை செய்யும் ஆஜ் தக் என்பவர் கடந்த 22(டிசம்பர் 2021)-ஆம் திகதி அளித்த பேட்டியில், அதிகாரிகல் ரெய்டு வந்தபோது பியூஷ் ஜெயின் டெல்லியில் இருந்தார். இவர் தந்தையின் சிகிச்சைக்காக ஒட்டுமொத்த குடும்பமும் டெல்லியில் இருந்தது.
வீட்டில் பியூஷ் ஜெயினின் 2 மகன்கள் மட்டும்தான் இருந்தனர். விசாரணை அதிகாரிகள் அழைக்கவும் அவர்கள் கான்பூர் திரும்பியதாக கூறினார்.
கான்பூரின் இத்தர்வாலியில் வாசனைப்பொருட்கள் விற்கும் இடத்துக்கே பெயர் போன இடத்தில் தான் பியூஷ் ஜெயின் தன் வர்த்தகத்தை நடத்தி வந்துள்ளார்.
இவருக்கு கான்பூர், மும்பையில் அலுவலகங்கள் உண்டு. இவர் சுமார் 40 நிறுவனங்களின் மூலம் தன் வர்த்தகத்தை நடத்துவதும் ரெய்டின் போது தெரியவந்தது. இந்த ரெய்டில் கணக்கில் வராத சந்தன எண்ணெய், மற்றும் பிற வாசனை திரவியங்கள் கைப்பற்றப்பட்டன.
வரலாற்றில் இதுதான் மிகப்பெரிய பறிமுதல், ரெய்டு என்று விவேக் ஜோஹ்ரி என்ற மத்திய மறைமுக வரி மற்றும் கஸ்டம்ஸ் வரி தலைவர் கூறியுள்ளார். பியூஷ் ஜெயின் ஒவ்வொரு ஒன்று அல்லது ஒன்றைரை வருடங்களுக்கு தனது காவலாளிகளை மாற்றுவார்.
ஆனந்தபுரியில் உள்ள தனது பங்களாவில், பியூஷ் ஜெயின் மாதம் 7,500 ரூபாய் சம்பளத்திற்கு இரண்டு வாட்ச்மேன்களை மட்டுமே நியமித்துள்ளார்.
பியூஷ் ஜெயின் ஆடம்பரமான கார்களைத் தவிர்ப்பார் மற்றும் பழைய வாகனங்களையே ஓட்டுவார். அவர் தனது 15 வயது மகன் பிரத்யுஷ் பெயரில் பதிவு செய்யப்பட்ட டொயோட்டா கார் மற்றும் போக்ஸ்வேகன் வைத்திருந்தார். பியூஷ் ஜெயின் சமாஜ்வாதி கட்சியுடன் தொடர்பு வைத்திருப்பதாக உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், தற்போது வரை ஜிஎஸ்டி அதிகாரிகள் நடத்திய இந்தச் சோதனையில் 257 கோடி ரூபாய் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு,ம் சொந்தமான இடத்தில் இருந்து 25 கிலோ தங்கம், 250 கிலோ வெள்ளி, கணக்கில் காட்டப்படாத ஏராளமான மூலப் பொருள்கள், 600 கிலோ சந்தன எண்ணெய் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த ஆதாரங்களின் அடிப்படையில், மத்திய ஜிஎஸ்டி சட்டப் பிரிவு 132-இன் கீழ் பியூஷ் ஜெயினை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை கைது செய்து, நேற்று(டிசம்பர் 27) நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர்.
அப்போது நீதிமன்றம் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும் படி நீதிபதி உத்தரவிட்டார்.