தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இன்னொரு டோஸ் தேவைப்படலாம்... கொள்ளைநோயும் முடிவுக்கு வரலாம்: ஜேர்மன் அறிவியலாளர்
ஜேர்மனியில், ஏற்கனவே தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் சிலருக்கு வரும் இலையுதிர்காலத்தில் மீண்டும் ஒரு பூஸ்டர் டோஸ் தேவைப்படலாம் என்கிறார் ஜேர்மன் அறிவியலாளர் ஒருவர்.
பிரபல ஜேர்மன் வைராலஜி துறை நிபுணரான Christian Drosten, குளிர்காலம் நெருங்கும் நேரத்தில், எப்படி ஆண்டு தோறும் ப்ளூ காய்ச்சலுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடுவோமோ அதேபோல கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட சிலருக்கும், பூஸ்டர் தடுப்பூசி போடவேண்டிய தேவை ஏற்படலாம் என்கிறார்.
அந்த காலகட்டத்தில், புதிய திடீர்மாற்றம் பெற்ற கொரோனா வைரஸ்களையும் எதிர்கொள்ளும் வகையில் தடுப்பூசிகள் தயாரகியிருக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார் அவர்.
சிலரது உடலில் உருவாகியுள்ள சில ஆன்டிபாடிகள் காலப்போக்கில் செயலிழக்கலாம் என்று கூறும் Drosten, அவர்களுக்கு இந்த பூஸ்டர் டோஸ் தேவை என்கிறார்.
அதே நேரத்தில், இந்த கொள்ளைநோய் முடிவுக்கு வராது என்று யாரும்
கவலைப்படவேண்டியதில்லை என்று கூறும் Drosten, இந்த வைரஸும் அடங்கி, அம்மை நோய்
போன்று, குறிப்பிட்ட நாடுகளில் குறிப்பிட்ட காலம் மட்டுமே வரும் ஒரு நோயாக
மாறிவிடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது என்கிறார்.