புலம்பெயர்ந்தோரை ஆப்பிரிக்காவுக்கு நாடுகடத்தும் திட்டம்: வருங்கால மன்னர் தெரிவித்துள்ள எதிர்மறையான கருத்து...
பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தால் பிரித்தானிய இளவரசரும் வருங்கால மன்னருமான இளவரசர் சார்லஸ் விரக்தியடைந்துள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
புலம்பெயர்ந்தோரை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் பிரித்தானிய உள்துறைச்செயலர் பிரீத்தி பட்டேலின் திட்டம் அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதாக இளவரச்ர் சார்லஸ் தெரிவித்துள்ளாராம்.
போரிஸ் ஜான்சனின் புகலிடக் கொள்கை இளவரசர் சார்லசை விரக்தியடையச் செய்துள்ளதாக டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
பிரித்தானியாவுக்குள் சட்ட விரோதமாக நுழைவோரை 4,000 மைல்களுக்கப்பால் இருக்கும் ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் வகையில், பிரித்தானிய உள்துறைச்செயலரான பிரீத்தி பட்டேல் அந்நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துள்ளார்.
இந்நிலையில், இளவரசர் சார்லசுக்கு நெருக்கமான ஒருவர், இந்தக் கொள்கையால் இளவரசர் மிக அதிக அளவில் ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறி தனது விரக்தியை வெளிப்படுத்தியதாக தெரிவித்துள்ளார்.