மேற்கு ஜேர்மனியில் விமான விபத்து: குடியிருப்பு கட்டிடத்தில் பெரும் சேதம்: இருவர் பலி!
மேற்கு ஜேர்மனியில் நிகழ்ந்த விமான விபத்தில் இருவர் பலியாகியுள்ளனர்.
மேற்கு ஜேர்மனியின் கோர்சென்ப்ரோக் நகரில் சனிக்கிழமை நண்பகலில் சிறிய ரக விமானம் ஒன்று குடியிருப்பு வீட்டின் மேல் விழுந்து நொறுங்கியதில் இருவர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தால் கட்டிடத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டது.
தொழில்நுட்பக் கோளாறுகளை எதிர்கொண்டதாக கூறப்படும் இந்த விமானம், மோன்சென்கிளாட்பாக் விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.
விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவில் உள்ள விமான நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தபோது, விமானம் குடியிருப்பு கட்டிடத்தில் மோதியது.
மோதிய வேகத்தில் மேற்கூரையில் தீப்பிடித்து, வீட்டிற்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
விபத்தில் 71 வயது பெண் விமானி உட்பட இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரண்டாவது பலியானவர் விமானத்தில் இருந்தாரா அல்லது தரையில் இருந்தாரா என்பதை அடையாளம் காண அதிகாரிகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
விபத்தினால் பாதிக்கப்பட்ட வீட்டில் வசிக்கும் மூன்று நபர்களில், இருவர் விபத்து நடந்த நேரத்தில் அங்கில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விபத்துக்குள்ளான விமானி, சனிக்கிழமை காலை கிழக்கு ஜேர்மனியில் உள்ள எர்ஃபர்ட்டுக்கு அருகிலுள்ள அல்கர்ஸ்லெபனில் இருந்து புறப்பட்டவர். இந்த விபத்துக்கான சரியான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |