பட்டாசு வெடித்த பின்னரே விமானம் பறக்கும் இந்திய விமான நிலையம்.., ஆண்டுக்கு ரூ.12 கோடி செலவு
இந்திய மாநிலம் ஒன்றில் இருக்கும் விமான நிலையத்தில் பறவைகளை விரட்டுவதற்கு பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.
பட்டாசுகள் வெடிப்பு
இந்திய மாநிலமான கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள சர்வதேச விமான நிலையம், அரபிக்கடலோரத்தில் அமைந்துள்ளது. இது, பீமா பள்ளி முதல் சங்கு முகம் வரையில் உள்ள மீனவ கிராம பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு மீன்களை உண்பதற்கு வரும் பறவைகள் அதிகம். இதன் காரணமாக விமானங்கள் புறப்படும்போதும், தரையிறங்கும் போதும் பறவைகள் அதிகமாக கூடுகின்றன. அதன்படி, கடந்த ஒரு வருடத்தில் பறவைகள் மோதி 10 விமானங்களுக்கு மேல் சேதம் ஏற்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இந்த அச்சுறுத்தலை கட்டுப்படுத்தும் வகையில் விமான நிலையத்தின் நான்கு புறங்களிலும் சுமார் 12 இடங்களில் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.
விமானங்கள், தரை இறங்குவதற்கும், புறப்படுவதற்கும் முன்பாக இந்த பட்டாசுகள் முழங்கும். ஒரு நாளைக்கு சுமார் 400 முதல் 500 குண்டு பட்டாசுகளும், 100 ராக்கெட் பட்டாசுகளும் வெடிப்பதற்கு ரூ.3 லட்சத்து 30 ஆயிரம் செலவு செய்யப்படுகிறது.
அதன்படி, ஆண்டுக்கு சராசரியாக ரூ.12 கோடிக்கு பட்டாசுகள் விமான நிலையத்தில் வெடிக்கப்படுகிறது. இதனை தவிர பட்டாசு வெடிக்கும் பணிக்கு 30 பணியாளர்கள் உள்ளனர். இவர்களின் மாத சம்பளம் ரூ.24 ஆயிரம் ஆகும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |