ரயிலில் பயணியுங்கள்... நாட்டு மக்களுக்கு சுவிஸ் அரசு விடுத்துள்ள கோரிக்கையின் பின்னணி
நாட்டு மக்களை, ரயில் அல்லது ட்ராம் போக்குவரத்தை பயன்படுத்துமாறு சுவிஸ் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
2050 வாக்கில் பொதுப்போக்குவரத்தை இரட்டிப்பாக்க சுவிஸ் அரசு முடிவு செய்துள்ளது.
கார்பன்டையாக்சைடு வெளியேற்றத்தை குறைக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கையை சுவிட்சர்லாந்து எடுக்க உள்ளது.
சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவது பெருமளவில் குறைந்துள்ளது.
சுவிஸ் மக்களில் 80 சதவிகிதம் மக்கள், போக்குவரத்துக்கு தங்கள் சொந்த
வாகனத்தைத்தான் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.