மகாராணியாரின் பவள விழா நேரத்தில் பிரித்தானியா முழுவதும் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு
பிரித்தானியா பரபரப்பாக மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களுக்காக தயாராகி வரும் நிலையில், நாடு முழுவதும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் வேறொரு விதத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ஆம், எங்களுக்கு இனி மன்னராட்சி வேண்டாம் என்ற பொருளில், ‘எலிசபெத் கடைசி நபராக இருக்கட்டும்’ என்று கூறும் போஸ்டர்கள் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த போஸ்டர்களை வைத்துள்ளது Republic என்னும் ஒரு அமைப்பாகும். மன்னராட்சிக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட இந்த அமைப்பு, தேர்தல் முறையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தலைவர் வேண்டும் என விரும்புகிறது.
இதே அமைப்பு, சென்ற ஆண்டு, வேல்ஸ் நாட்டிலும், ’வேல்ஸ் நாட்டிற்கு இளவரசர் தேவையில்லை’ என்று கூறும் போஸ்டர்களை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.