பிரபல பின்னணி பாடகியின் 15 வயது மகளுக்கு நேர்ந்த கொடூரம்! பாதிரியார் உட்பட 4 பேர் மீது போக்ஸோ சட்டம் பாய்ந்தது
பிரபல தமிழ் மற்றும் தெலுங்கு பின்னணி பாடகியின் 15 வயது மகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதைச் செய்தது பாடகியின் தங்கை மற்றும் அவரது குடும்பத்தினர் என்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து, பாடகி சென்னையில் உள்ள கீழ்பாக்கம் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அவர் தனது புகாரில், தற்போது 15 வயதாக்கும் தனது மகள் கடந்த 8 ஆண்டுகளாக சென்னையில் உள்ள தனது தங்கையின் வீட்டில் தங்கி படித்து வந்ததாக கூறியுள்ளார்.
இந்த எட்டு ஆண்டுகளும் தனது மகளை, தனது தங்கையின் கணவர் மற்றும் அவரது உறவினரின் மகன் மற்றும் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த பாதிரியார் ஹென்றி பால் ஆகியோர் பாலியல் துன்புறுத்தல் செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும், இவர்களுக்கு தனது தங்கையும் உடந்தை என பொலிஸில் புகார் அளித்த பிரபல பாடகி, அவர்கள் நான்கு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கும்படி புகார் அளித்துள்ளார்.
ஹைதராபாதில் வசிக்கும் பின்னணி பாடகி, பிரபல தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடுவராக பங்கேற்க சென்னைக்கு வந்திருந்தபோது, தனது மகள் தனக்கு நடந்த பாலியல் ரீதியான கொடுமைகளை விவரித்ததைக் கேட்டு அதிர்ச்சியடைந்ததாக கூறியுள்ளார்.
புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிஸார், சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர்.
இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட 4 பேர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.