தயவு செய்து நம்ம கிட்ட இருக்கும் தடுப்பூசியை கொடுத்து உதவுங்க! இந்தியா மக்களுக்காக தங்கள் நாட்டு பிரதமரிடம் கெஞ்சும் நெகிழ்ச்சி தகவல்
கொரோனாவால் இந்தியா கதிகலங்கி போயிருக்கும் நிலையில், இங்கு உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்பி உதவும் படி அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனால் நாள் ஒன்றிற்கு லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர்.
இதன் மூலம் ஒரு கட்டத்தில் கொரோனாவை சமாளித்து வந்த இந்தியாவுக்கா இப்படி ஒரு நிலைமை என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி கொரோனாவை மிகவும் சாதரணமாக எடுத்துக் கொண்டால் இது தான் நிலைமை என்று பலரும் எச்சரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்தியாவிற்கு உதவ அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகள் முன் வந்துள்ளன. அந்த வகையில், அமெரிக்காவில் உபரியாக இருக்கும் தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அனுப்பி உதவும் படி அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அமெரிக்க வாழ் இந்தியர்கள் நெருக்கடி கொடுத்துள்ளனர்.
அமெரிக்க இந்தியும் எம்.பி.யுமான ராஜா கிருஷ்ண மூர்த்தி கூறுகையில் இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய மக்களுக்கு இந்த நேரத்தில் உதவி அவசியம். நம்முடைய சேமிப்புக் கிடங்குகளி்ல் அமைதியாக தடுப்பூசிகளை வைத்திருக்க முடியாது. அதை தேவையுள்ளவர்களுக்கு வழங்கி உயிரைக் காக்க வேண்டும். தற்போது அமெரிக்க இருப்பில் 4 கோடி அஸ்ட்ராஜென்கா தடுப்பூசிகள் இருப்பு உள்ளன.
இதை நாம் பயன்படுத்தவில்லை. சர்வதேச அளவில் இந்த வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த வேண்டும், மக்களின் உடல்நிலையைக் காத்து, சர்வதேச பொருளாதாரத்தையும் பாதுகாக்க வேண்டும். அதற்கு இந்தியர்களுக்கு தடுப்பூசியை வழங்கிட வேண்டும். எனவே, கோடிக்கணக்கில் நம்மிடம் இருக்கும் அஸ்ட்ராஜென்கா தடுப்பூசியை உடனடியாக இந்தியா, அர்ஜென்டினா, உள்ளி்ட்ட தேவைப்படும் நாடுகளுக்கு வழங்க அதிபர் பிடன் நிர்வாகம் முன்வர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து ப்ரூக்கிங் இன்ஸ்ட்டியூட்டைச் சேர்ந்த தான்வி மதன் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவுக்கு உதவ பாகிஸ்தான் பிரதமர், ஈரான் பிரதமரும் முன்வந்துவிட்டார்கள். ரஷ்யா, சீனாவும் ஆதரவு வழங்கிவிட்டார்கள். அமெரிக்கா இதுவரை ஏதும் பேசவி்ல்லை.இனியும் பேசாமல் இருந்தால், கடந்த சில மாதங்களாக பெற்ற நற்பெயரை பைடன் நிர்வாகம் இழந்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இந்தியரும், ஜோ பைடன் பிரச்சாரக் குழுவில் இருந்த சோனல் ஷா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், இந்தியாவில் கொரோனா பிரச்சினை இருப்பது உண்மைதான், மிகப்பெரிய மனிதநேயபிரச்சினையாக மாற உள்ளது. அதற்குள் அமெரிக்க அரசு ஏதாவது செய்ய வேண்டும், மற்ற நாடுகளுக்கும் இது பரவிவிடும் என எச்சரித்துள்ளார்.
மேலும், அமெரிக்காவின் சுகாதாரத்துறையின் உயர் அதிகாரி ஆஷிஸ் கே ஜா , தி வாஷிங்டன் டைம்ஸ் நாளேட்டில் எழுதிய கட்டுரையில் இந்தியாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் அந்நாட்டின் சுகாதாரத்துறையே உருக்குலைத்துவிடும். உடனடியாக அமெரி்க்கா உதவ வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.