விடுதலை செய்யுங்கள்.. அல்லது கருணைக் கொலை செய்யுங்கள்! கதறும் இலங்கை ஈழ அகதிகள்
தமிழகத்தின் திருச்சி மத்திய சிறையின், சிறப்பு முகாமில் இலங்கை ஈழத்தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக, கடந்த ஆறு நாட்களாக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்திற்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும் என்று அவர்கள் கூறி வருகின்றனர்.
அதாவது, தற்போது முதல்வராக பொறுப்பேற்றுள்ள, ஸ்டாலின் எங்களை விடுதலை செய்ய வேண்டும், என்று தொடர்ந்து 6-வது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது குறித்து அவர்கள் பல்வேறு தலைவர்களுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். இதையடுத்து தலைவர்கள் சிலர் இவர்களின் விடுதலை குறித்து அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.
இருப்பினும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இவர்களின் போராட்ட காட்சிகளை பிரத்யேகமாக ஐபிசி தமிழ்நாடு நேரலையாக எடுத்துள்ளது. இதில் இருக்கும் ஈழத்தமிழர்கள் தங்கள் கோரிக்கை குறித்து கூறியுள்ளனர். அதன் முழு வீடியோ இதோ....