கனடாவில் தரையிறங்கினேன்; உலகளாவிய பிரச்சனைகளை பேசுவேன் - பிரதமர் நரேந்திர மோடி
ஜி-7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடாவில் தரையிறங்கியுள்ளதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
கனடாவின் Kananaskisயில் ஜி-7 உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி சென்றுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் இதுதான் அவரது முதல் கனேடிய பயணம் ஆகும். அவர் உலக தலைவர்களுடன் எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம் மற்றும் புதுமை உள்ளிட்ட முக்கியமான உலகளாவிய பிரச்சனைகளில் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி (Narendra Modi) கனடாவில் தரையிறங்கியுள்ளதாக பதிவிட்டுள்ளார்.
உலகளாவிய பிரச்சனைகள்
அவர் தனது எக்ஸ் பதிவில், "ஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க கனடாவின் கால்கரியில் தரையிறங்கினேன்.
இந்த உச்சி மாநாட்டில் பல்வேறு தலைவர்களை சந்தித்து, முக்கியமான உலகளாவிய பிரச்சனைகள் குறித்த எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வேன். உலகளாவிய தெற்கின் முன்னுரிமைகளையும் வலியுறுத்துவேன்" என தெரிவித்துள்ளார்.
Landed in Calgary, Canada, to take part in the G7 Summit. Will be meeting various leaders at the Summit and sharing my thoughts on important global issues. Will also be emphasising the priorities of the Global South. pic.twitter.com/GJegQPilXe
— Narendra Modi (@narendramodi) June 17, 2025
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |