‘பிணங்கள் குவியட்டும்’ என கூறியது உண்மையென்றால் பிரித்தானியா பிரதமர் பதவி விலக வேண்டும்! கொந்தளித்த கொரோனாவால் குடும்பத்தையே இழந்த பெண்
பிரித்தானியாவில் 3வது பொதுமுடக்கம் விதிப்பதை விட ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியது உண்மை என்றால் அவர் பதவி விலக வேண்டும் என கொரோனாவால் குடும்பத்தை இழந்த பெண் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் 3வது பொதுமுடக்கம் விதிப்பதை விட ஆயிரக்கணக்கில் பிணங்கள் குவியட்டும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாக The Daily Mail செய்தி வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எனினும், பிரித்தானியா அமைச்சர்கள், பிரதமர் அலுவலம் மற்றும் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் இதை மறுத்துள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் பேசியதாக கூறப்படும் கருத்துக்கள் தனது இதயத்தை நொறுக்கும் வகையில் இருந்ததாகவும், அது உண்மை என நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும் என வேல்ஸில் உள்ள Rhondda Cynon Taf பகுதியைச் சேர்ந்த Mountjoy கொந்தளித்துள்ளார்.
கடந்த ஆண்டு கொரோனாவல் ஐந்து நாட்களுக்குள் Mountjoy தனது தாய் மற்றும் இரண்டு சகோதர்களை இழந்தார்.
நாங்கள் அனுபவித்த வலியும் வேதனையும் பிரதமர் அனுபவித்திருந்தால் அவர் அவ்வாறு சொல்லியிருக்கமாட்டார்.
3 போரை இழந்து கடும் துயரத்தில் இருக்கும் போது இதுபோன்ற கருத்துக்களை கேட்பது உண்மையில் இதயத்தை நொறுக்குவது போல் இருக்கிறது.
போரிஸ் அவ்வாறு பேசியிருந்தால், பிரதமராக இருக்க அவர் தகுதியற்றவர்.
மன்னிப்பு கேட்பது ஒரு தொடக்கமாக இருக்கும், ஆனால் உண்மையில் அவர் அவ்வாறு சொல்லியிருந்தால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என குடும்பத்தையே இழந்த தவிக்கும் Mountjoy கூறினார்.