உலகிலிருந்து கொரோனாவை ஒழிக்க பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் அதிரடி திட்டம்!
கொரோனாவை ஒழிக்க 2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என ஜி-7 தலைவர்களை பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் வலியுறுத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜி-7 மாநாடு ஜூன் 11ம் திகதி இங்கிலாந்தின் Cornwall-ல் தொடங்கி 13ம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இந்த மாநாட்டில் கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
2022 ஆம் ஆண்டின் இறுதிக்குள் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போட உறுதியளிக்க வேண்டும் என ஜி-7 மாநாட்டில் பங்கேற்கும் சக தலைவர்களுக்கு பிரித்தானியா பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுக்கவுள்ளார்.
கொரோனாவுக்கு பின் இருக்கும் மிகப்பெரிய சவால்களிலிருந்து எப்படி நாம் மீண்டெழ போகிறோம் என உலகம் நம்மை எதிர்நோக்கி இருக்கிறது.
அடுத்த ஆண்டு இறுதிக்குள் உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி போடுவது மருத்துவ வரலாற்றில் மிகப் பெரிய சாதனையாகும்.
இந்த கொடூரமான தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவர எங்களுடன் இணையுமாறு எனது சக ஜி-7 தலைவர்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன்.
கொரோனா வைரஸால் ஏற்பட்ட பேரழிவை மீண்டும் நடக்க நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.