இலங்கை பயணத்திற்கு முன் பிரதமர் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்: பாமக நிறுவனர் ராமதாஸ்
பிரதமர் நரேந்திர மோடி இலங்கை பயணத்திற்கு முன் மீனவர்கள் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு பயணம் மேற்கொள்வதை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், "ராமேசுவரத்தை அடுத்த பாம்பன் பகுதியில் இருந்து சென்று வங்கக்கடலில் கச்சத்தீவுக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
வாழ்வாதாரம் தேடி மீன் பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் இத்தகைய மறைமுகத் தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது.
அதுமட்டுமின்றி, அதிக எண்ணிக்கையிலான மீனவர்கள் அபராதம் விதிக்கப்படும். சிறை தண்டனை விதிக்கப்படும் சிறைகளில் வாடிக் கொண்டிருக்கின்றனர்.
அபராதம் விதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரால் அதிக செலுத்த முடியாத நிலையில், அவர்கள் எப்போது விடுதலை ஆவார்கள் என்பது தெரியவில்லை. இந்த சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டிய மத்திய, மாநில அரசுகள் போதிய கவனம் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதாய் ஏற்க முடியாது" என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில், "இலங்கையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஏப்ரல் 5ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி கொழும்பு செல்லவிருப்பதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அதற்கு முன்பாக இலங்கை அரசுடன், இந்தியா பேச்சு நடத்தி மீனவர் சிக்கலுக்கு தீர்வு காண வேண்டும்.
இலங்கை சிறைகளில் வாடும் தமிழக மீனவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும். இந்தியப் பிரதமரின் கொழும்பு பயணத்தின்போது இந்திய - இலங்கை கடல் பகுதியில் இருநாட்டு மீனவர்களும் மீன் பிடிப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதையும் மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |