அடங்க மறுக்கும் புடின்! பிரபல நாட்டின் கால்பந்து அணி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு
ரஷ்யாவுக்கு எதிரான 2022 உலகக்கோப்பை கால்பந்து ப்ளே ஆப் போட்டியில் விளையாடுவதற்கு போலாந்து மறுப்பு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷ்ய கூட்டமைப்பின் போர் தாக்குதல் மற்றும் ஆக்கிரமிப்பு காரணமாக, போலந்து அணி ரஷ்யாவிற்கு எதிரான பிளே-ஆஃப் விளையாடுவதைக் கருத்தில் கொள்ளவில்லை.
இந்த தகவலை போலாந்து கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் Cezary Kulesza இன்று வெளியிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில், பேசும் நேரம் முடிந்துவிட்டது. செயல்பட வேண்டிய நேரம் இது. உக்ரைனில் ரஷ்ய கூட்டமைப்பின் ஆக்கிரமிப்பு அதிகரித்ததன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.
It is the right decision! I can’t imagine playing a match with the Russian National Team in a situation when armed aggression in Ukraine continues. Russian footballers and fans are not responsible for this, but we can’t pretend that nothing is happening. https://t.co/rfnfbXzdjF
— Robert Lewandowski (@lewy_official) February 26, 2022
போலாந்து கால்பந்து அணி நட்சத்திர வீரர் Robert Lewandowski வெளியிட்ட டுவிட்டர் பதிவில், இது சரியான முடிவு! உக்ரைனில் ஆயுதமேந்திய ஆக்கிரமிப்பு தொடரும் சூழ்நிலையில் ரஷ்ய தேசிய அணியுடன் ஒரு போட்டியில் விளையாடுவதை என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை.
ரஷ்ய கால்பந்து வீரர்கள் மற்றும் ரசிகர்கள் இதற்கு பொறுப்பல்ல, ஆனால் எதுவும் நடக்கவில்லை என்று பாசாங்கு செய்ய முடியாது என தெரிவித்துள்ளார்.
மார்ச் 24-ஆம் திகதி உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்பதற்காக போலாந்து அணி ரஷ்யா செல்லவிருந்தது குறிப்பிடத்தக்கது.