பிரித்தானியாவில் 10 வயது சிறுவனை மிருகத்தனமாக தாக்கிய பொலிஸார்! வெளியான சர்ச்சை வீடியோ
பிரித்தானியாவில் தன்னை மிருகத்தனமாக தாக்க வரும் பொலிஸ் அதிகாரியிடமிருந்து தப்பிக்க, 10 வயது சிறுவன் தரையில் சுருண்டு தவழ்ந்து செல்லும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவம் இங்கிலாந்தின் மெர்சிசைடு பகுதியில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்துள்ளது. ஆனால், தற்போது அப்பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெட்டவெளிச்சமாகியுள்ளது.
சிசிடிவி காட்சியில், கிறிஸ்டோபர் க்ரூஸ் (Christopher Cruise) எனும் 57 வயது பொலிஸ் அதிகாரி, மன அழுத்தத்தில் இருக்கும் 10 வயது மாணவனை, பள்ளி வளாகத்தில் வைத்து தாக்குகிறார்.
தரையில் சுருண்டு விழுந்து கிடக்கும் அந்த சிறுவனை, தனது காலால் வேகமாக எட்டி உதைக்க முயற்சிக்கிறார். ஆனால் சிறுவன், தன் முகத்தை மறைத்து தற்காத்துக்கொண்டு அருகில் இருக்கும் அறையினுள் நுழைய முயற்சிக்கிறான்.
அப்போது, கிறிஸ்டோபர் சிறுவனின் கோட் காலரை பிடித்து எழுத்து, மற்றோரு அறைக்குள் தராதரவரென இழுத்துச் செல்லுகிறார். அப்போது, சிறுவனின் முழங்காலில் காயம் ஏற்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர், பின்னர் மற்றோரு மாணவரை பார்த்து 'அடுத்து நீ தான்' என மிரட்டியுள்ளார். இவை அனைத்தும் அந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது.
கிறிஸ்டோபர் க்ரூஸ் பள்ளியின் தொடர்பு அதிகாரியாக இருந்துள்ளார் மற்றும் மாணவர்களை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட Merseyside Police's Safer Schools எனும் பிரிவின் ஒரு பகுதியாகவும் இருந்துள்ளார்.
அவர் செய்த குற்றங்களுக்கு, அவருக்கு சிறை தண்டனை ஏதும் வழங்கப்படவில்லை. பதிலாக, க்ரூஸுக்கு 800 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்டது மற்றும் 100 பவுண்டுகள் இழப்பீடாகவும், அத்துடன் 500 பவுண்டுகள் வழக்கு விசாரணைகாவும் மற்றும் 85 பபூண்டுகள் பாதிக்கப்பட்டவருக்கான கூடுதல் கட்டணம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.
அதுபோக, அவரது மேல்முறையீடுக்கான நீதிமன்ற செலவில் மேலும் 1,620 பவுண்டுகளுக்கான பில்லை அவருக்குக் கொடுத்தது. ஆனால் சிறுவனின் உறவினர்கள் அவருக்கு சிறை தண்டனை கிடைத்திருக்க வேண்டும் என்று கூறினர். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியிடப்பட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளது.