வாகன சோதனையில் சிக்கிய நபரால் பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி
சுவிட்சர்லாந்தின் லூசர்ன் நகரில் வாகன சோதனையில் சிக்கிய நபரால் பொலிசாருக்கு கிடைத்த அதிர்ச்சி தகவல்.
வியாழக்கிழமை பிற்பகல், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த லூசர்ன் பொலிசார் லூசர்ன் நகரில் ஒரு காரை சோதனை செய்தார்.
60 வயதான அந்த சாரதி, மது போதையில் இருப்பதாக கருதிய பொலிசார் அவரை சோதனையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் அவரிடம், சாரதிகளுக்கான உரிமம் இல்லை என்பது மட்டுமின்றி, கடந்த 20 ஆண்டுகளாக அவர் உரிமம் இன்றியே வாகனம் ஓட்டுவதும் அம்பலமானது.
இதனையடுத்து அவர் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள முடிவெடுத்துள்ளதாக லூசர்ன் பொலிசார் தெரிவித்துள்ளனர்.