சக காவலரை துப்பாக்கியால் சுட்ட காவலர்! அடுத்து நிகழ்ந்த சோகம்
இந்தியாவின் அசாம் மாநிலத்தில் காவலர் ஒருவர் தனது துப்பாக்கியால் சக காவலரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சக காவலர் மீது துப்பாக்கிச் சூடு
அசாம் மாநிலம் சரைடியோவில் Constable ஆக பணிபுரிந்து வருபவர் தீபக் காகதி. இவர் சோனாரி காவல்நிலையத்தில் பணியில் இருந்தபோது, சக காவலரான ககுல் பசுமத்தரியை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
இதில் நிலைதடுமாறி சரிந்து விழுந்த ககுல் பசுமத்தரி, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை மேற்கொண்ட நிலையில் துரதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்தார்.
Representational
காவலரிடம் விசாரணை
இதற்கிடையில் தீபக் காகதியை கைது செய்த பொலிஸார், அவரிடம் இருந்து Service Rifle துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் துப்பாக்கியால் சுட்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.