பிரித்தானியாவுக்கு அகதியாக வந்த சிறுவன் மாயம்... சரியாக ஆங்கிலம் பேசத் தெரியாது என்பதால் ஏற்பட்டுள்ள கவலை
ஒரு மாதம் முன்பு அகதியாக பிரித்தானியாவுக்கு வந்த சிறுவன் ஒருவன் திடீரென மாயமாகியுள்ளான்.
முகமது கான் ( Mohammed Khan, 11), என்ற சிறுவன், கடந்த மாதம்தான் ஆப்கானிஸ்தானிலிருந்து பிரித்தானியாவுக்கு அகதியாக வந்தான்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 4 மணிக்குப் பிறகு அவனைக் காணவில்லை. பொலிசார், ’அதி அபாய காணாமல் போனவர்கள் விசாரணை’ ஒன்றைத் துவக்கி, சிறுவனைத் தேடி வருகிறார்கள்.
தெற்கு லண்டனிலுள்ள, Deptford பகுதியில், தான் தங்கியிருக்கும் இடத்திலிருந்து அருகிலுள்ள பூங்கா ஒன்றிற்கு கால்பந்து விளையாடச் சென்ற முகமதுவை, அதற்குப் பின் காணவில்லை.
Pashto மொழி பேசும் முகமதுவுக்கு சரியாக ஆங்கிலமும் பேசத்தெரியாது என்பதால், இரண்டு நாட்களாக அவனைக் காணாத நிலையில் தாங்கள் அதிக கவலையடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
அவனுக்கு இங்கு யாரையும் தெரியாது, ஆங்கிலமும் சரியாக பேசத்தெரியாது, சமீபத்தில்தான் Deptfordக்கு வந்தான் என்பதால், அவனுக்கு வழியும் தெரியாது என்கிறார் பொலிஸ் அதிகாரியான Lara Pink.
அத்துடன், அவனுக்கு யாராலாவது ஆபத்து ஏதாவது ஏற்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது என்பதால், அவனைக் குறித்து யாருக்காவது தெரியவந்தால் உடனடியாக தகவலளிக்க முன்வருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.