ஜேர்மனியில் வெடிபொருட்கள் வாங்க முயன்றபோது சிக்கிய வெளிநாட்டவர்கள்: தவிர்க்கப்பட்ட பெரும் சேதம்
ஜேர்மனியில் வெடிபொருட்கள் வாங்க முயன்றபோது இருவர் சிக்கிய நிலையில், அவர்கள் மற்றொரு நாட்டில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்ததையடுத்து பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது.
தெற்கு ஜேர்மனியிலுள்ள Stuttgart நகரில், கடந்த 20ஆம் திகதியன்று வெடிபொருட்கள் வாங்க முயன்றபோது, இருவர் பொலிசாரிடம் சிக்கினார்கள்.
விசாரணையில், அவர்கள் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்தவர்கள் என்பதும், சுவிட்சர்லாந்தில் பெரிய அளவில் தாக்குதல் ஒன்றை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்ததும் தெரியவந்ததையடுத்து பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
24 மற்றும் 26 வயதுடைய அந்த இருவரும் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், ஜேர்மன் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளின் பொலிசார் இணைந்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.